மணிப்பூரில் நிலநடுக்கம்: ரிக்டரில் 4.0ஆக பதிவு

மணிப்பூரின் உக்ருல் நகரில் இன்று காலை 6.14 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவாகியுள்ளது. 10 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக தேசிய நிலநடுக்க அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.இதனால், அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் பாதுகாப்புக்காக வீதிகளில் தஞ்சமடைந்தனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்த விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை.