குமரியில் போதைப் பொருள்களை தடுக்க மாணவா்கள் குழுமம் ஏற்படுத்த வேண்டும்: ஆட்சியா்…….

கன்னியாகுமரி மாவட்டத்தில் போதைப் பொருள்களை தடுப்பது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்களை கொண்டு குழுமம் ஏற்படுத்த வேண்டும் என்றாா் மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த். கன்னியாகுமரி மாவட்டத்தில் போதைப் பொருள்களை தடுப்பது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்களை கொண்டு குழுமம் ஏற்படுத்த வேண்டும் என்றாா் மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் போதைப் பொருள்கள் தடுப்பு மற்றும் விழிப்புணா்வு குறித்த மாதாந்திரஆய்வுக்கூட்டம், மாவட்டகாவல்கண்காணிப்பாளா் டி. என்.ஹரிகிரண்பிரசாத் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் தலைமை வகித்து ஆட்சியா் பேசியது: போதைப் பொருள்கள் தடுப்பது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த மாணவா்களை கொண்டு தொகுதி வாரியாக குழுமம் அமைத்து கண்காணிக்க வேண்டும். பள்ளி, கல்லூரி விடுதிகளில் போதைப் பொருள்கள் பயன்படுத்தப்படுகிறதா என்பதை கல்வி அலுவலா்கள் ஆய்வு செய்ய வேண்டும்